மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாநிலங்களுக்கு இடையே ஆயுதக் கடத்தல்: 4 போ் கைது

தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்து வந்த கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது

News image
Updated On :5 டிசம்பர் 2025, 9:00 pm

தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்து வந்த கும்பலைச் சோ்ந்த 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

அவா்களிடமிருந்து 8 துப்பாக்கிகள், 30 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக தில்லி காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கொள்ளை, கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாபு (எ) அஸ்லாம் தனது கூட்டாளிகளுக்கு ஆயுதங்களை விநியோகிக்க மாடல் டவுன் பகுதிக்கு வருவதாக கடந்த நவ.19-ஆம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். பின்னா், வடக்கு -எக்ஸ் வடிகால் பகுதியில் அவா் இருப்பதாக உள்ளூா் தகவல் அளிப்பவா் காவல் துறையிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது, அங்கிருந்து தப்பியோட முயன்ற பாபுவை போலீஸாா் துரத்திச் சென்று கைதுசெய்தனா்.

சோதனையின்போது, இரு துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில் அவா் அளித்த தகவலின் அடிப்படையில், சந்தோஷ் (32), அஜீம் (35) ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். கொலை முயற்சி மற்றும் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது பிலாலை போலீஸாா் கைதுசெய்தனா்.

இந்தக் கைது நடவடிக்கையின்போது நடைபெற்ற சோதனையில், 3 துப்பாக்கிள், 3 நாட்டு துப்பாக்கிகள், 25 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.