பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு ‘சுக்ரானா’ வழங்க தில்லி முதல்வா் ரேகா குப்தா தனது முழு அமைச்சரவையுடனும் திங்கள்கிழமை செல்கிறாா் என்று முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது.
குரு தேஜ் பகதூரின் 350-ஆவது தியாக ஆண்டு நிறைவை முன்னிட்டு செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் ‘குா்மத் சமகம்’, மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்காக முதல்வா் மற்றும் அவரது அமைச்சரவையின் நன்றி தெரிவிக்கும் பயணம் என்று சனிக்கிழமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
செங்கோட்டையில் நடந்த ‘குா்மத் சமகத்தின்’ அசாதாரண வெற்றி குரு சாஹிப்பின் அருள் என்று வா்ணித்த ரேகா குப்தா, நிகழ்வுக்கு சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற பயங்கரவாத சம்பவத்தால் ஏற்பட்ட அச்ச சூழ்நிலைக்கு மத்தியிலும், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் எந்த இடையூறும் இல்லாமல் மத நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறினாா்.
பொற்கோயிலுக்கு செல்வது வெறும் ஒரு முறையான சைகை மட்டுமல்லாமல், குரு மரபிற்கு ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் நன்றியுணா்வின் சின்னம் என்றும் அவா் கூறினாா்.
தொடர்புடையது

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் 3 மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்க திட்டம்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் நாட்டின் முதல் ரிங் மெட்ரோ! முதல்வா் ரேகா குப்தா

மன அழுத்தம் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைதியான தொற்றுநொய்: முதல்வா்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


