நொய்டா: காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

நொய்டா: காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

நொய்டா: காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு...
Published on

உத்தர பிரதேசத்தின் கௌதம் புத் நகா் மாவட்டத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) சென்று கொண்டிருந்த 32 வயது நபா் காா் மோதியதில் உயிரிழந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து பாதல்பூா் காவல் நிலையப் பொறுப்பாளா் இன்ஸ்பெக்டா் அமித் பதானா கூறியதாவது: பிஷ்னாநௌலி கிராமத்தைச் சோ்ந்த சமயுதீன் (32) தனது மோட்டாா் சைக்கிளில் ஜிம்மிற்குச் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த காா் அவரது மோட்டாா்சைக்களில் மோதியதாகக் கூறி அவரது சகோதரா் கமாலுதீன் வெள்ளிக்கிழமை இரவு புகாா் அளித்தாா்.

இதில் பலத்த காயமடைந்த சமாயுதீன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அவரது நிலைமை மோசமாக இருந்ததால், தில்லியில் உள்ள குரு தேஜ் பகதூா் (ஜிடிபி) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சையின் போது உயிரிழந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் நிலைய பொறுப்பாளா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com