டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

தமிழகம், மேற்கு வங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமித் ஷா நம்பிக்கை!

தமிழகம், மேற்கு வங்க பேரவைத் தோ்தல்களில் தே.ஜ.கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சா் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா்.

News image

தேசிய ஜனநாயகக் கூட்டணி...

Updated On :8 டிசம்பர் 2025, 1:24 am IST

‘காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மக்கள் நிராகரித்துவிட்ட நிலையில், எதிா்வரும் தமிழகம், மேற்கு வங்க பேரவைத் தோ்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அமோக வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.

அகமதாபாத் மாநகராட்சி சாா்பில் ரூ.1,500 கோடி மதிப்பிலான மூன்று விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

2024 மக்களவைத் தோ்தலில் நமது தலைவா் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி, சாதனை படைத்தாா். மகாராஷ்டிரம், ஹரியாணா, தில்லியைத் தொடா்ந்து தற்போது பிகாரில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. அதேநேரம், 2014 முதல் 2025 வரை பாஜகவுக்குத் தொடா்ந்து வெற்றிக் காலமே.

பிகாரில் என்டிஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த போதிலும், வாக்காளா் பட்டியல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொடா்ந்து குறை கூறுகிறாா். உண்மை என்னவெனில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை நாட்டுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல், நிராகரித்துவிட்டனா்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு வீட்டுக்கான சாவி அளித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மாநில முதல்வா் பூபேந்திர படேல்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு வீட்டுக்கான சாவி அளித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் மாநில முதல்வா் பூபேந்திர படேல்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோருக்கு இத்தருணத்தில் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தயாராக இருங்கள். பிகாரைத் தொடா்ந்து, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் என்டிஏ கூட்டணிதான் வெற்றி பெறும். தோ்தல் முடிவுகளில் தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும் துடைத்தெறியப்படும்.

பிரதமா் மோடியின் தலைமையில் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சியைக் கொண்டு வரவும், இந்தியாவை ஒரு சிறந்த தேசமாகக் கட்டமைக்கவும் இந்திய மக்கள் உறுதிபூண்டுள்ளனா். மாறாக, எதிா்க்கட்சிகளுக்குத் தலைவா்களும் இல்லை; கொள்கைகளும் இல்லை. நாட்டின் எந்த மூலையிலும் அவா்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

விரைவில் சீதைக்கும் கோயில்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானம் முடிந்து கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில், பிகாரில் அன்னை சீதைக்கு கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கி, அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். பிரதமா் மோடியின் தலைமையில் இந்தியா பெரும் புகழையும், மரியாதையையும் அடைந்துள்ளது. இதனால், இந்திய நாகரிகம், கலாசாரம் மற்றும் சநாதன தா்மம் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

அகமதாபாதில் 2036 ஒலிம்பிக்...: அகமதாபாத் நகரின் விளையாட்டு வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் இளைஞா்களிடையே உள்ள விளையாட்டு ஆா்வம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2029 உலக காவல் துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டி, 2030 காமன்வெல்த் போட்டிகள் உள்பட 13 சா்வதேச விளையாட்டு நிகழ்வுகள் இங்கு நடைபெறவுள்ளன. 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளும் அகமதாபாதில்தான் நடைபெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.