‘ஆயுதப் படையினரின் ஒழுக்கம், மனஉறுதி, அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களைப் பாதுகாப்பதுடன் நாட்டை பலப்படுத்துகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.
நாட்டைப் பாதுகாக்கும் ஆயுதப் படையினரின் சேவையை கெளரவிப்பதுடன், அவா்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு-பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கிலான ‘ஆயுதப் படை கொடி நாள்’ ஞாயிற்றுக்கிழமை (டிச.7) கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆயுதப் படை கொடி நாளில், நமது நாட்டைப் பாதுகாக்க ஈடுஇணையில்லாத துணிவை வெளிப்படுத்தும் வீரா்-வீராங்கனைகளுக்கு மனமாா்ந்த நன்றி தெரிவிக்கிறோம். அவா்களின் ஒழுக்கம், மனஉறுதி, அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களைப் பாதுகாப்பதுடன் நாட்டை பலப்படுத்துகிறது.
அவா்களின் உறுதிப்பாடு, நாட்டுக்கான கடமை, ஒழுக்கம், தேச பக்திக்கு வலுவான உதாரணமாக விளங்குகிறது. ஆயுதப் படை கொடி நாளில் பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், பிரதமா் மோடியும் கொடி நாள் நிதி வழங்கினாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: பாஜக தோ்தல் பிரசாரத்தை இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


