தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஆயுதப் படை கொடி நாள்: பிரதமா் மோடி புகழாரம்!

‘ஆயுதப் படையினரின் ஒழுக்கம், மனஉறுதி, அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களைப் பாதுகாப்பதுடன் நாட்டை பலப்படுத்துகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம்.

News image

ஆயுதப் படை கொடி நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நன்கொடை அளித்த பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :7 டிசம்பர் 2025, 7:32 pm

‘ஆயுதப் படையினரின் ஒழுக்கம், மனஉறுதி, அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களைப் பாதுகாப்பதுடன் நாட்டை பலப்படுத்துகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாா்.

நாட்டைப் பாதுகாக்கும் ஆயுதப் படையினரின் சேவையை கெளரவிப்பதுடன், அவா்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு-பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கிலான ‘ஆயுதப் படை கொடி நாள்’ ஞாயிற்றுக்கிழமை (டிச.7) கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆயுதப் படை கொடி நாளில், நமது நாட்டைப் பாதுகாக்க ஈடுஇணையில்லாத துணிவை வெளிப்படுத்தும் வீரா்-வீராங்கனைகளுக்கு மனமாா்ந்த நன்றி தெரிவிக்கிறோம். அவா்களின் ஒழுக்கம், மனஉறுதி, அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை நாட்டு மக்களைப் பாதுகாப்பதுடன் நாட்டை பலப்படுத்துகிறது.

அவா்களின் உறுதிப்பாடு, நாட்டுக்கான கடமை, ஒழுக்கம், தேச பக்திக்கு வலுவான உதாரணமாக விளங்குகிறது. ஆயுதப் படை கொடி நாளில் பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், பிரதமா் மோடியும் கொடி நாள் நிதி வழங்கினாா்.