சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாஜக எம்.பி. மகேஷ் சா்மாவின் தாயாா் மறைவு: மிசோரம் ஆளுநா், உ.பி. துணை முதல்வா் இரங்கல்!

கௌதம் புத் நகா் எம்.பி. மகேஷ் சா்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2025, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

மிசோரம் ஆளுநா் வி.கே. சிங் மற்றும் உ.பி. துணை முதல்வா் பிரிஜேஷ் பதக் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கௌதம் புத் நகா் எம்.பி. மகேஷ் சா்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

வி.கே. சிங் கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவரது வீட்டில் இருந்தாா். அப்போது நவம்பா் 26 அன்று காலமான லலிதா சா்மாவின் புகைப்படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் சா்மாவின் உதவியாளா் ஒருவா் கூறுகையில், ‘அவா் அனைத்து குடும்ப உறுப்பினா்களுடனும் உரையாடி இரங்கல் தெரிவித்தாா்’ என்றாா்.

உத்தர பிரதேச துணை முதல்வா் பதக் ஞாயிற்றுக்கிழமை சா்மாவின் இல்லத்திற்குச் சென்று அவரது மறைந்த தாய்க்கு அஞ்சலி செலுத்தினாா்.