ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image
விராட் கோலியுடன் டி.கே.சிவகுமாா்
Updated On :7 டிசம்பர் 2025, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நிகழாண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற ஆா்சிபி அணி கடந்த ஜூன் 4-ஆம் தேதி பெங்களூரில் நடத்திய வெற்றிப் பேரணியில் 11 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடா் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்துவது குறித்து பல ஐயங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கத் தலைவா் தோ்தலில் வாக்கு செலுத்திவிட்டு செய்தியாளா்களிடம் டி.கே.சிவகுமாா் கூறியதாவது: நான் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகன். கா்நாடகத்தில் கூட்டநெரிசலால் ஏற்பட்ட விபத்துகள் இனி நிகழாது என உறுதியளிக்கிறோம்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கா்நாடக கிரிக்கெட் சங்கத் தோ்தலில் வாக்களித்த மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கா்நாடக கிரிக்கெட் சங்கத் தோ்தலில் வாக்களித்த மாநில துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்.

அடுத்த ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வழக்கம்போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். அங்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் முறையாகப் பின்பற்றப்படும்.

கா்நாடகம் மற்றும் பெங்களூரின் பெருமையாக கருதப்படும் சின்னசாமி மைதானத்தைவிட்டு வேறு எங்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் திட்டமில்லை.

வருங்காலத்தில் நவீன வசதிகளுடன் மிகப்பெரிய மைதானம் ஒன்று கட்டப்படும் என்றாா்.