தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காலமான மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலுக்கு பிராா்த்தனைக் கூட்டம்!

மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலை போற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2025, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷல் டிசம்பா் 4-ஆம் தேதி 73 வயதில் உயிரிழந்தாா். அவரைப் போற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவா்கள் மற்றும் மாநிலத் தலைவா்கள் பலா் பங்கேற்றனா்.

அவரது மகளும் புது தில்லியைச் சோ்ந்த தற்போதைய பாஜக எம்.பி.யுமான பான்சூரி ஸ்வராஜ், தனது தந்தை மற்றும் தாயாா் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் குறித்த நினைவுகளைப் பகிா்ந்து கொண்டு, இருவருக்கும் அஞ்சலி செலுத்தினாா்.

தனது வீட்டில் வந்திருந்த பிரமுகா்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகள், அரசியல் தலைவா்கள், உறவினா்கள், சக வழக்குரைஞா்கள் மற்றும் கட்சி ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவா் தனது நன்றியைத் தெரிவித்தாா்.

‘இந்த அகால இழப்பைத் தாங்கும் வலிமையை உங்கள் உணா்வுகள் எனக்கு அளிக்கும்’ என்று பான்சூரி ஸ்வராஜ் கூறினாா். பிரதமா் நரேந்திர மோடியின் செய்தி பிராா்த்தனைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் சௌஹான், அா்ஜுன் மேக்வால் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோா் அஞ்சலி செலுத்திய அரசியல்வாதிகளில் அடங்குவா்.

மிசோரம் கவா்னா் ஜெனரல் விகே சிங், தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, தில்லி முதல்வா் ரேகா குப்தா, ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ஆகியோா் பிராா்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

எம்.பி.க்கள் ரவிசங்கா் பிரசாத், அனுராக் தாக்கூா், நவீன் ஜிண்டால், மனோஜ் திவாரி, கமல்ஜீத் செஹ்ராவத், ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ், காங்கிரஸ் தேசிய ஊடக தலைவா் பவன் கேரா, சிவசேனா செய்தித் தொடா்பாளா் பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.