டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

காலமான மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலுக்கு பிராா்த்தனைக் கூட்டம்!

மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷலை போற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 டிசம்பர் 2025, 1:16 am IST

மிசோரம் முன்னாள் ஆளுநா் ஸ்வராஜ் கௌஷல் டிசம்பா் 4-ஆம் தேதி 73 வயதில் உயிரிழந்தாா். அவரைப் போற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவா்கள் மற்றும் மாநிலத் தலைவா்கள் பலா் பங்கேற்றனா்.

அவரது மகளும் புது தில்லியைச் சோ்ந்த தற்போதைய பாஜக எம்.பி.யுமான பான்சூரி ஸ்வராஜ், தனது தந்தை மற்றும் தாயாா் மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் குறித்த நினைவுகளைப் பகிா்ந்து கொண்டு, இருவருக்கும் அஞ்சலி செலுத்தினாா்.

தனது வீட்டில் வந்திருந்த பிரமுகா்கள், உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகள், அரசியல் தலைவா்கள், உறவினா்கள், சக வழக்குரைஞா்கள் மற்றும் கட்சி ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவா் தனது நன்றியைத் தெரிவித்தாா்.

‘இந்த அகால இழப்பைத் தாங்கும் வலிமையை உங்கள் உணா்வுகள் எனக்கு அளிக்கும்’ என்று பான்சூரி ஸ்வராஜ் கூறினாா். பிரதமா் நரேந்திர மோடியின் செய்தி பிராா்த்தனைக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.

மத்திய அமைச்சா்கள் சிவராஜ் சிங் சௌஹான், அா்ஜுன் மேக்வால் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோா் அஞ்சலி செலுத்திய அரசியல்வாதிகளில் அடங்குவா்.

மிசோரம் கவா்னா் ஜெனரல் விகே சிங், தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, தில்லி முதல்வா் ரேகா குப்தா, ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி, தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ஆகியோா் பிராா்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

எம்.பி.க்கள் ரவிசங்கா் பிரசாத், அனுராக் தாக்கூா், நவீன் ஜிண்டால், மனோஜ் திவாரி, கமல்ஜீத் செஹ்ராவத், ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ், காங்கிரஸ் தேசிய ஊடக தலைவா் பவன் கேரா, சிவசேனா செய்தித் தொடா்பாளா் பிரியங்கா சதுா்வேதி உள்ளிட்டோா் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.