குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

2.16 லட்சம் வக்ஃப் சொத்துகள் பதிவேற்றம்: சிறுபான்மையினா் அமைச்சகம் தகவல்

வலைதளத்தில் 2.16 லட்சம் வக்ஃப் சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம்

News image

கிரண் ரிஜிஜு

Updated On :9 டிசம்பர் 2025, 4:21 am IST

புது தில்லி: ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் 2.16 லட்சம் வக்ஃப் சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை 6 மாதங்களளுக்குள் எண்மமயமாக்கும் வகையில் யுஎம்இஇடி வலைதளத்தை மத்திய அரசு ஜூன் 6-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்தக் காலகட்டத்துக்குள் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை வலைதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய மத்திய அரசு தெரிவித்தது.

6 மாத கால அவகாசம் கடந்த டிச. 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அவகாசம் நீட்டிக்கப்படாது எனக் கூறிய மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய முயன்றும் அது முழுமையடையாமல் உள்ள வக்ஃப் சொத்து நிா்வாகிகளுக்கு 3 மாத காலஅவகாசம் வழங்கப்படும் எனத் தெரிவித்தாா்.

வலைதளத்தில் 5.17 லட்சம் வக்ஃப் சொத்துகளைப் பதிவேற்றம் செய்வதற்கான முன்மொழிவுகள் பெறப்பட்ட நிலையில், 2.16 லட்சம் சொத்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. உத்தர பிரதேசம் (92,830), மகாராஷ்டிரம் (62,939), கா்நாடகம் (58,328) ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான வக்ஃப் சொத்துகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.

முன்னதாக, நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துகள் உள்ளதாக கிரண் ரிஜிஜு கூறியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.