புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான (பயோ டீசல்) உயிரி எரிபொருள் பயன்பாடு, இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள் விநியோக சங்கிலியில் இனி உயிரி எரிபொருளையும் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.
பசுமை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்து மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலும் மறுசுழற்சி ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தும் நோக்கத்திலும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவ சேவைப் படையின் 265 வது படைப்பிரிவு தினத்தையொட்டி, ராணுவத்தில் உயிரி எரிபொருள் பயன்பாட்டை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி தில்லியில் இன்று (டிச. 8) நடைபெற்றது.
லெப்டினென்ட் ஜெனரல் புஷ்பேந்திர பால் சிங், ராணுவ துணைத் தளபதி, ராணுவ மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ராணுவ எரிபொருள் சங்கிலியில் உயிரி எரிபொருள் பயன்பாடு தொடக்கி வைக்கப்பட்டது.
எரிபொருள் பயன்பாட்டில் மற்ற நாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில், கரும்பு உள்ளிட்டவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இ-20 பெட்ரோலை பயன்படுத்த ராணுவம் ஒப்புக்கொண்டது. இ-20 பெட்ரோலில் 20% எத்தனால் இருப்பதால் மாசுபாடு குறைவாகும்.
தற்போது, உயிரி எரிபொருளைப் பயன்படுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது, இயற்கையை பாதுகாப்பதில் உள்ள ராணுவத்தின் அக்கறையைக் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Summary
Army introduces bio-diesel into fuel supply chain, major step towards green logistics
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை மாநகராட்சியில் ஜூன் முதல் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகம்

இந்திய ராணுவ தலைமைத் தளபதியின் பேச்சுக்கு பாகிஸ்தான் விமர்சனம்!

பாலாற்றில் குப்பைகள் அகற்றும் பணி: வேலூா் ஆட்சியா் ஆய்வு

இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக சீா்திருத்தம் - ராணுவ தலைமை தளபதி தகவல்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



