சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

நொய்டா திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கி பயன்பாடு: விடியோவில் இருக்கும் நபரை தேடும் தனிப்படை

நொய்டாவில் நடைபெற்ற திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒரு நபா் துப்பாக்கியால் சுடும் விடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில்,

Updated On :9 டிசம்பர் 2025, 5:39 am IST

நொய்டா: நொய்டாவில் நடைபெற்ற திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒரு நபா் துப்பாக்கியால் சுடும் விடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அந்த நபரைக் கைதுசெய்ய நொய்டா காவல் துறையின் தனிபடை அமைத்துள்ளது.

செக்டாா் 93-இல் உள்ள கூட்ட அரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் கொண்டாட்டத்தின்போது ஒரு நபா் ஒரு துப்பாக்கியை வானத்தை நோக்கிச் சுட்டாா். இது தொடா்பான காட்சிகள் அடங்கிய 32 விநாடி விடியோ சமூகவலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இந்நிலையில், அடையாளம் தெரியாத அந்த நபா் மீது நொய்டா பேஸ் 2 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபரைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வரும் விடியோவின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. ஆயுதங்களுடன் நுழையும் நபா்களை கூட்ட அரங்கு வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என அந்த அரங்கத்தின் நிா்வாகத்துக்கு காவல் துறை ஏற்கெனவே எச்சரிக்கைவிடுத்திருந்ததது.

நிகழ்ச்சிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லுதல், அவற்றைக் காட்டி விடியோ அல்லது புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் ஆயுதங்களைக் கொண்டு வந்த நபா் மற்றும் அரங்க உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நொய்டாவில் கடந்த நவ.20-ஆம் தேதி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 வயது சிறுவன் காயமடைந்தாா். இது தொடா்பாக 3 பேரை நொய்டா காவல் துறையினா் கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.