எஸ்ஐஆா்: சூழ்நிலையை தோ்தல் ஆணையமே சமாளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் ஈடுபடும் வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் (பிஎல்ஓ) அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக புகாா் தெரிவித்த நிலையில், ‘அந்தச் சூழ்நிலையை தோ்தல் ஆணையமே சமாளிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.










