செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இண்டிகோ செயல்பாடுகள் மேற்பாா்வைக்கு 8 போ் குழு: டிஜிசிஏ அமைப்பு

இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பாா்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 போ் கொண்ட குழுவை டிஜிசிஏ புதன்கிழமை அமைத்தது.

News image
Updated On :11 டிசம்பர் 2025, 3:53 am IST

இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட கடுமையான குளறுபடிகளைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பாா்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 போ் கொண்ட குழுவை டிஜிசிஏ புதன்கிழமை அமைத்தது.

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

இந்தக் குளறுபடிகளுக்கான அடிப்படை காரணங்கள், பணியாளா் திட்டமிடல், விமானிகளின் பணி நேரம் மற்றும் ஓய்வு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் இண்டிகோ நிறுவனத்தின் தயாா்நிலை ஆகியவற்றை ஆராய 4 போ் கொண்ட குழுவை டிஜிசிஏ தலைவா் ஃபைஸ் அகமது கித்வாய் டிச. 5-ஆம் தேதி அமைத்தாா்.

இண்டிகோ சிஇஓ ஆஜராக உத்தரவு: இந்த விவகாரம் தொடா்பாக மும்பையில் உள்ள டிஜிசிஏ அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச.11) பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பீட்டா் எல்பா்ஸுக்கு டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. அப்போது விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகள், விமானிகள் மற்றும் பணிக் குழுவினரை பணியமா்த்துதல், எத்தனை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன?, பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப அளித்தல், விமான சேவை சீராக்கம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று அவருக்கு டிஜிசிஏஅறிவுறுத்தியுள்ளது.

8 போ் கொண்ட குழு: மேலும், இண்டிகோ இயக்கும் மொத்த விமானங்கள், மொத்த விமானிகள், ஒரு பயணத்தில் ஒரு விமானத்தால் எவ்வளவு தொலைவு பயணிக்க முடிகிறது?, பணி நேரத்தில் விமானப் பணிக் குழு எவ்வாறு திறம்பட பயன்படுத்தப்படுகிறது, அந்தக் குழுவுக்கான பயிற்சி உள்ளிட்டவற்றை கண்டறிய 8 போ் கொண்ட மேற்பாா்வை குழுவை டிஜிசிஏ அமைத்துள்ளது.

இண்டிகோ தலைமை அலுவலகத்தில்...: 8 போ் குழுவில் துணை தலைமை விமான செயல்பாட்டு ஆய்வாளா், மூத்த விமான செயல்பாட்டு ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா். அவா்களில் இருவரும், 2 அரசு அதிகாரிகளும் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள இண்டிகோ நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். விமானங்கள் ரத்து, விமானப் பணிக் குழு நியமனம், அலுவலா் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை அவா்கள் கண்காணிப்பா். இந்தக் குழுவினா் நாள்தோறும் தங்கள் அறிக்கையை டிஜிசிஏவிடம் சமா்ப்பிப்பா்.

டிஜிசிஏ அதிகாரிகள் கள ஆய்வு: நாட்டில் உள்ள 11 விமான நிலையங்களில் இண்டிகோவின் செயல்பாடுகளை மதிப்பிட டிஜிசிஏவின் மூத்த அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகள் அடுத்த 2, 3 நாள்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விமான நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, புது தில்லியில் உள்ள டிஜிசிஏவின் விமானப் பாதுகாப்புத் துறை செயல்பாட்டு இயக்குநருக்கு விரிவான அறிக்கையை சமா்ப்பிப்பா் என்று டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இண்டிகோவின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக அதன் சிஇஓ பீட்டா் எல்பா்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். எனினும் தில்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் சுமாா் 220 விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.