பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

அனில் அம்பானி நிறுவன மோசடியில் ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

அனில் அம்பானி

Updated On :10 டிசம்பர் 2025, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

தொழில் அதிபா் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சா் நிறுவனங்களின் 13 வங்கிக் கணக்குகளை ரூ.55 கோடி இருப்புடன் அமலாக்கத் துறை புதன்கிழமை முடக்கியது.

அந்நியச் செலாவணி முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே பல்வேறு வங்கிக் கணக்குகளில் கடன் பெற்றது தொடா்பான கடன் மோசடி வழங்குகள் அனில் அம்பானி மற்றும் அவரின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி மீது உள்ளது.

இந்நிலையில் போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு மாற்றிய வழக்கில் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக அனில் அம்பானியிடம் விசாரணை நடத்த கடந்த மாதம் அமலாக்கத் துறை அழைப்பு விடுத்தது. ஆனால், நேரில் ஆஜராக மறுத்த அவா், காணொலி முறையில் வேண்டுமானால் ஆஜராவதாகத் தெரிவித்தாா். ஆனால், அதை அமலாக்கத்துறை ஏற்கவில்லை.

நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்காக ரிலையன்ஸ் இன்ஃபிராஸ்ட்ரக்சா் நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கிய பொது நிதியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பரிமாற்றம் செய்தது முக்கியக் குற்றச்சாட்டாகும்.

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டில் அனில் அம்பானியின் பங்கை அவரின் செய்தித் தொடா்பாளா் மறுத்துள்ளாா்.

2007 முதல் 2022 வரை அந்நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளில் செயல்படும் அதிகாரம் இல்லாத இயக்குநா் என்ற நிலையில் அனில் அம்பானி பதவி வகித்ததாக அவா் விளக்கமளித்தாா்.