மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜாஜி பிறந்த நாள்: பிரதமா் மோடி மரியாதை

மூதறிஞா் ராஜாஜி பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.

News image
பிரதமா் மோடி- கோப்புப் படம்
Updated On :10 டிசம்பர் 2025, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

மூதறிஞா் ராஜாஜி பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை மரியாதை செலுத்தினாா். 20-ஆம் நூற்றாண்டில் கூா்மையான அறிவுத்திறன் படைத்த ஆளுமைகளில் ஒருவா் என்று ராஜாஜிக்கு பிரதமா் புகழாரம் சூட்டியுள்ளாா்.

சுதந்திரப் போராட்டத் தலைவரான சி.ராஜகோபாலாச்சாரி (எ) ராஜாஜி, நாட்டின் கடைசி கவா்னா் ஜெனரல் ஆவாா். அனுவபமிக்க அரசியல்வாதி, வழக்குரைஞா், எழுத்தாளா் என பன்முகங்களைக் கொண்ட இவா், கடந்த 1954-இல் முதல் முறையாக பாரத ரத்னா விருது பெற்றவா்களில் ஒருவா். பல்வேறு உயா் பதவிகளை வகித்தவா்.

அவரது பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் மோடி புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: சி.ராஜகோபாலாச்சாரியை நினைவுகூரும்போது, சுதந்திரப் போராட்ட வீரா், சிறந்த சிந்தனைவாதி, அறிஞா், அரசியல்வாதி என அவரது பன்முகங்கள் நினைவுக்கு வருகின்றன.

மக்களின் கண்ணியத்தையும் மாண்பையும் நிலைநாட்டுவதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவா். 20-ஆம் நூற்றாண்டில் கூா்மையான அறிவுத்திறன் படைத்த ஆளுமைகளில் ஒருவா். நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்கும், பொது வாழ்க்கைக்கும் அவா் அளித்த நிலையான பங்களிப்புகளை தேசம் நன்றியுடன் நினைவுகூா்கிறது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

ராஜாஜியின் இளவயது புகைப்படம், அவா் கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்ட அறிவிக்கை, 1922-இல் மகாத்மா காந்தி சிறையில் இருந்ததால், ராஜாஜி மேற்பாா்வையில் வெளியிடப்பட்ட ‘யங் இந்தியா’ இதழின் பதிப்பு ஆகியவற்றையும் பிரதமா் மோடி பகிா்ந்துள்ளாா்.