நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காங்கிரஸ் கேள்விகளுக்கு அமித் ஷாவிடம் பதில் இல்லை: ராகுல்

வெளிப்படையான வாக்காளர் பட்டியல் குறித்த கேள்விக்கு அமித் ஷாவிடம் பதில் இல்லை என ராகுல் விமர்சனம்.

News image

ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு - படம் - ஏஎன்ஐ

Updated On :10 டிசம்பர் 2025, 7:11 pm IST

வெளிப்படையான வாக்காளர் பட்டியல் குறித்த கேள்விக்கு அமித் ஷாவிடம் பதில் இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் காந்தி தெரிவித்தார்.

மக்களவையில் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதத்தின்போது அமித் ஷா பேசியதைத் தொடர்ந்து ராகுல் காந்தி அவையில் இருந்து வெளியேறினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,

எங்கள் (காங்கிரஸ்) கேள்விகளுக்கு அமித் ஷா முறையாக பதில் அளிக்கவில்லை. தற்காத்துக்கொள்ளும் வகையிலான பதிலையே அமித் ஷா அளித்துள்ளார்.

வெளிப்படையான வாக்காளர் பட்டியல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு அமித் ஷா பதில் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டமைப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் எனக் கூறினேன். ஆனால் அது குறித்து எதுவும் பேசவில்லை.

தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கம் குறித்து எதுவும் பேசவில்லை. தேர்தல் ஆணையருக்கு முழு ஆற்றல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் அஞ்சவில்லை எனப் பேசினார்.

Summary

Winter session MP Rahul Gandhi about amit shas parliamentry speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.