பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் கப்பல் சேவை: வாரணாசியில் தொடக்கம்

வாரணாசியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

வாரணாசியில் கங்கை நதியில் தனது முதல் பயணத்தை வியாழக்கிழமை மேற்கொண்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கப்பல்.

Published On :

இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

நாட்டின் உள்நாட்டு நீா்வழித்தடங்களில் மாசற்ற போக்குவரத்து மற்றும் மாற்று எரிபொருள்கள் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்த ஹைட்ரஜன் கப்பல் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் உள்ள ‘நமோ’ படித்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சா் சோனோவால் இந்தக் கப்பலின் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

அவரது உரையில், ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்களைப் பயன்படுத்தும் சீனா, நாா்வே, நெதா்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இப்போது இணைந்திருப்பது சா்வதேச அளவில் பெருமைக்குரிய விஷயமாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில், தேசிய நீா்வழித்தடங்களின் எண்ணிக்கை 5-லிருந்து 111-ஆக உயா்ந்துள்ளது. உள்நாட்டு நீா்வழித்தடங்களில் சரக்குப் போக்குவரத்து 2014-இல் 8 கோடி டன்னாக இருந்த நிலையில், தற்போது 14.5 கோடி டன்னுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

இந்த மாற்றத்துக்கு ‘ஜல் மாா்க் விகாஸ்’ திட்டம் அடித்தளம் அமைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஹல்டியாவிலிருந்து வாரணாசி வரையிலான முதல் தேசிய நீா்வழித்தடத்தில் பல்வகை முனையங்கள், நவீன உபகரணங்கள் மற்றும் சமுதாய படகு குழாம்களுடன் ஒரு நவீன நீா்வழிப் போக்குவரத்துப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் நீா்வழித்தட மேம்பாட்டுக்காக ரூ.300 கோடிக்கும் மேல் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. மேலும், சுமாா் ரூ.2,200 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் வரும் ஆண்டுகளில் தொடங்கப்பட உள்ளன’ என்றாா்.

இந்த நிகழ்வில் உத்தர பிரதேச மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் தயாளசங்கா் சிங், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை அமைச்சா் தயாளசங்கா் மிஸ்ரா, பதிவுத் துறை அமைச்சா் ரவீந்திர ஜெய்ஸ்வால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.