அந்தமான் நிகோபார் தீவில், விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.
தெற்கு அந்தமான் மாவட்டத்தின் பியோத்னாபாத் நகரத்தில் உள்ள பூங்காவில் அமைக்கப்பட்ட விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் இன்று (டிச. 12) திறந்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், அந்தப் பூங்காவில் இன்று மாலை 3.15 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமித் ஷா மற்றும் மோகன் பாகவத் ருத்ராக்ஷ மரக்கன்றுகளை அங்கு நட்டு வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், அந்தமான் நிகோபாரின் துணைநிலை ஆளுநர் டி.கே. ஜோஷி பங்கேற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ விஜயபுரத்தில் பி.ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அமைச்சர் அமித் ஷா மற்றும் மோகன் பாகவத், சாவர்க்கர் குறித்து உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு பாடலை வெளியிடவுள்ளனர்.
முன்னதாக, விநாயக் தாமோதர் சாவர்க்கர் 1911 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில், அந்தமானில் உள்ள காலாபானி சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Home Minister Amit Shah and RSS chief Mohan Bhagwat inaugurated the statue of Savarkar in the Andaman.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆர்எஸ்எஸ் பற்றி ஒரு தலித் நபருக்கு ஏன் கவலை? பிரியங்க் கார்கே குறித்து பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு!

ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல் வீச்சு!






