ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

News image
தில்லியில் காற்றின் தரக் குறியீடு படுமோசம்
Updated On :15 டிசம்பர் 2025, 4:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: தலைநகர் புது தில்லியில் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்றின் தரக் குறியீடு மாறியிருப்பது மக்களுக்கு பெரும் கவயை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜஹாங்கிர்பூர் பகுதியின் காற்றின் தரக் குறியீடு 498 புள்ளிகளை எட்டியது. மக்கள் மூச்சுவிட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். இன்று காலை விடிந்ததும், காற்று மாசு காரணமாக பனிமூட்டம் போல காணப்பட்டது.

மிகவும் மோசமான காற்று மாசு என்பது, வெறும் வாசிர்பூரில் மட்டுமல், அதன் அண்மைப் பகுதிகளான ரோஹினி, அசோக் விகார் பகுதிகளையும் தொட்டிருக்கிறது.

38 நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு, மோசம் என்ற அளவிலும் இரண்டு நிலையங்களில் 'மிகவும் மோசம் என்ற அளவிலும் இருந்தது.

மத்திய காற்று மாசு தரக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட விவரத்தில், முதல் 50 புள்ளிகள்தான் நல்லது. அடுத்து 51 - 100 வரையிலான புள்ளிகள் மோசமில்லை, 101 முதல் 200 மிதமான காற்று, 201 முதல் 300 மோசம் என்ற அளவிலும் 401 முதல் 500 வரை மிகவும் மோசம் என்ற அளவையும் குறிக்கிறது.

தில்லி காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 461 ஆக உயர்ந்திருந்தது. இது இந்த குளிர்காலத்தில் நகரத்தின் மிகவும் மாசுபட்ட நாளாகவும், டிசம்பர் மாதத்தில் இரண்டாவது மிக மோசமான காற்றின் தர நாளாகவும் பதிவாகியுள்ளது, ஏனெனில் காற்றின் வீசம் வேகம் மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை, காற்றில் கலந்திருந்த மாசுகளை மேற்பரப்பிலேயே தக்க வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

வஜீர்பூரில் உள்ள காற்று தர கண்காணிப்பு நிலையம் பகலில் அதிகபட்சமாக 500 காற்று தர குறியீட்டு (AQI) மதிப்பைப் பதிவு செய்தது, அதற்கு மேல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தரவுகளைப் பதிவு செய்யவில்லை.

தில்லியின் காற்றின் தரம் இதுபோன்ற 'கடுமையான' நிலையில் தொடர வாய்ப்புள்ளதாகவேக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.