எஸ்ஐஆர் நடவடிக்கை எதிரொலி :
ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை(டிச. 16) வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகளின் ஒரு பகுதியாக ராஜஸ்தான், மேற்கு வங்கம், கோவா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளிலும் வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுவதாக இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில், ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை(டிச. 16) வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 42 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி நவீன் மஹாஜன் தெரிவித்திருப்பதாவது: “5.46 கோடி வாக்காளர்களில் 41.79 லட்சம் வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் பெறப்படவில்லை.
இதனையடுத்து, அந்தப் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அவர்களில், 8.75 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள் என்றும், 29.6 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள் என்றும், 3.44 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்களைப் பதிவு செய்தவர்கள்” என்றும் தெரிவித்தார்.
Summary
42 lakh voter names have been deleted in draft electoral rolls in Rajasthan during Special Intensive Revision (SIR), according to state Chief Electoral Officer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி எஸ்ஐஆா்: 99.5% படிவங்கள் விநியோகம்; 18% எண்மமய பணி நிறைவு!

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க.. புதிய விதிமுறை!







