தில்லி-என்சிஆரில் கட்டட பணிகளுக்கு 3 மாதங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- மத்திய அமைச்சா்
தில்லி - தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசு பிரச்னை நிலவும் மாதங்களான அக்டோபா் முதல் டிசம்பா் வரையில் கட்டட கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.










