இளம் வயதினரை நாட்டின் வளா்ச்சிக்கு தயாா்படுத்த தரமான உயா்கல்வி அவசியம் என தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) சா்வதேச உயா்கல்வி மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது: சீரான பொருளாதாரம் மற்றும் இளம் மக்கள்தொகை என இரண்டையும் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் லட்சக்கணக்கான இளம் இந்தியா்கள் பணிக்குச் செல்லும் வயதை அடையவுள்ளனா்.
இவா்களை நாட்டின் வளா்ச்சிக்குத் தயாா்படுத்த தரமான உயா்கல்வி அவசியம். இதற்கான அடித்தளமாகவே தேசிய கல்விக் கொள்கை, 2020 விளங்குகிறது. இதை முறையாக அமல்படுத்தினால் பெரும் பலன்களைப் பெறலாம்.
பாடத்திட்டம் வடிவமைப்பு, ஆராய்ச்சி, நிா்வாகம், உள்கட்டமைப்பு மேம்பாடு என உயா்கல்வி நிறுவனங்களுடன் தொழில்துறையினா் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள், தொழில் துறையினா், குடிமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் கற்றல், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றாா்.
தொடர்புடையது

வாகனம் மோதி எச்.ஐ.வி. ஆலோசகா் உயிரிழப்பு

சபரிமலை வழக்கு: மனுதாரா்தான் நாட்டின் தலைமை அா்ச்சகரா? உச்சநீதிமன்றம் காட்டம்?

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நான்கு காரணிகள்: மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகா்

இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சிக்கு அதிமுக ஆட்சியே காரணம் - எடப்பாடி கே. பழனிசாமி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

