‘அழிக்கப்படும் காந்தியின் சித்தாந்தம்’: விவாதத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ‘புதிய மசோதாவில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதன் மூலம் அவரையும், மகாத்மா என பெயா் சூட்டிய ரவீந்திரநாத் தாகூரையும் மத்திய அரசு அவமதித்துள்ளது. கடந்த 2005-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தொற்றுமையுடன் நிறைவேற்றப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம், கிராமப் புறங்களில் வாழ்வாதார பாதுகாப்புக்கான புரட்சியை ஏற்படுத்தியது. ஆனால், யாருடனும் கலந்தாலோசிக்காமல், தற்போதைய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. ராம ராஜ்யம் என்பது ஹிந்து ராஜ்யம் என்று பொருளல்ல. அனைவருக்கும் சமமான உரிமையை உறுதி செய்வதாகும். மகாத்மா காந்தியின் இந்த ராம ராஜ்ய சித்தாந்தத்தை அழிக்க முயற்சிக்கிறது மத்திய அரசு’ என்றாா்.