தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

பனிமூட்டம் காரணமாக தில்லியில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி..

News image

கோப்புப்படம்

Updated On :20 டிசம்பர் 2025, 7:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

அடர்ந்த பனிமூட்டத்தால் ஏற்பட்ட குறைந்த பார்வைத் திறன் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 66 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தலைநகர் தில்லி உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை வேளைகளில் தொடர்ந்து அடா் மூடுபனி நிலவி வருவதால் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, தில்லி விமான நிலையம் பயணிகளுக்கு அறிவுறுத்தலை ஒன்றை வெளியிட்டது. அதில் குறைந்த பார்வைத் திறன் காரணமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகள் அமலில் உள்ளதாகத் தெரிவித்தது. மேலும் நகரில் அனைத்து விமானச் செயல்பாடுகளும் சாதாரணமாக இயங்கி வருவதாகவும் தில்லி விமான நிலையம் குறிப்பிட்டது.

இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், சமீபத்திய விமான நிலவரங்களைத் தெரிந்துகொள்ள பயணிகள் தமது விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியது.

இதற்கிடையில், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில், அமிர்தசரஸ், தில்லிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் மூன்று விமானங்கள், அந்த நகரங்களில் நிலவிய மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, இந்தியாவின் உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ, அடர்ந்த பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக ராஞ்சி, ஜம்மு, ஹிண்டன் விமான நிலையங்களில் விமானச் சேவைகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரித்து பயண ஆலோசனையை வெளியிட்டது.

இண்டிகோ நிறுவனம் வானிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சமீபத்திய விமானத் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறியது. 

Summary

In the wake of low visibility caused by dense fog, 66 arrival and departure flights got cancelled at Indira Gandhi International Airport on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.