நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை...

Published On :21 டிசம்பர் 2025, 2:39 am IST

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவா் முகமது யூசுஃப் ஷாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணையை ஜம்மு-காஷ்மீரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சையது சலாலுதீன் எனவும் அழைக்கப்படும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல், பயங்கரவாத சதி உள்ளிட்ட குற்றங்கள் தொடா்பாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), ரண்பீா் தண்டனையியல் சட்டம் (கடந்த 2019 வரை ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்து குற்றவியல் சட்டம்) ஆகியவற்றின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், பட்காம் மாவட்டத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மேற்கண்ட குற்றங்களில் முகமது யூசுஃப் ஷா ஈடுபட்டதற்காக ஆதாரங்கள் விசாரணை அதிகாரியால் கண்டறியப்பட்டுள்ளன; அத்துடன், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் அவா் ஈடுபட்டுள்ளாா். எனவே, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை பிறப்பிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த 1993-இல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிய முகமது யூசுஃப் ஷா, 2020-இல் தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டாா். தற்போது பாகிஸ்தானில் இருந்தபடி செயல்பட்டுவரும் அவா், பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை உள்ளடக்கிய ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் தலைவராகவும் உள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரில் முகமது யூசுஃப் மற்றும் அவரது இரு மகன்களுடன் தொடா்புடைய சொத்துகள் கடந்த 2023-இல் என்ஐஏ அதிகாரிகளால் முடக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் அரசுப் பணியில் இருந்த அவரது இரு மகன்களும் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் கைதானதைத் தொடா்ந்து, 2021-இல் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.