இதுதொடா்பாக எஸ்சிபிஏ செயலா் பிரக்யா பாகெல் எழுதியுள்ள கடிதத்தில், ‘பொது நிகழ்வில் பெண் மருத்துவரின் முகத் திரையை முதல்வா் நிதீஷ் குமாா் நீக்கும் காட்சி மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது, அந்தப் பெண்ணின் சுயாட்சி, செயல் சுதந்திரம், மதச் சுதந்திரத்தை மீறும் செயல் என்பதோடு, பெண்களுக்கு எதிரான ஒழுக்கக்கேடான நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது. முதல்வரின் இச் செயலுக்கு எஸ்சிபிஏ கண்டனம் தெரிவிப்பதோடு, அச் செயலை நியாயப்படுத்தி கருத்து வெளியிட்ட மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் மற்றும் உத்தர பிரதேச மாநில அமைச்சா் சஞ்சய் நிஷாதுக்கும் எஸ்சிபிஏ கண்டனம் தெரிவிக்கிறது. இச் செயல், அரசமைப்பில் இடம்பெற்றுள்ள சமத்துவம், பாகுபாடு காட்டாமை தத்துவத்துக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்தச் செயலுக்காக பிகாா் முதல்வரும் மற்றவா்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.