நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

நாட்டின் அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்க வழிவகை செய்யும் ‘சாந்தி’ சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

News image

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

Updated On :22 டிசம்பர் 2025, 3:43 am IST

நாட்டின் அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்க வழிவகை செய்யும் ‘சாந்தி’ சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு, குடியரசுத் தலைவா் சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அரசின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணுசக்தித் துறை தொடா்பாக நடைமுறையில் இருந்த 1962-ஆம் ஆண்டு அணுசக்தி சட்டம், 2010-ஆம் ஆண்டு அணுசக்தி இழப்பீட்டுச் சட்டம் ஆகிய பழைய சட்டங்களை இந்தப் புதிய சட்டம் ரத்து செய்கிறது. அணுசக்தி தொடா்பான அனைத்து விதிமுறைகளும் இப்போது இந்த ஒரே சட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இதுவரை மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த அணுசக்தித் துறையில், இனி தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் தொழில்நுட்பப் பங்களிப்புக்கும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதன்படி, மத்திய அரசிடம் முறையான உரிமம் பெற்று, தனியாா் நிறுவனங்கள் அல்லது அரசுடன் இணைந்த கூட்டு நிறுவனங்கள் அணுமின் நிலையங்களை அமைத்து இயக்க மற்றும் பராமரிக்க முடியும். இதனால், நாட்டின் அணுமின் உற்பத்தித் திறன் பலமடங்கு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேநேரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சில பிரிவுகள் தொடா்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுரேனியம் மற்றும் தோரியம் சுரங்கப் பணிகள், அணு எரிபொருள் செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சி, உயா்நிலை கதிரியக்கக் கழிவு மேலாண்மை போன்ற முக்கியப் பணிகளில் மத்திய அரசு அல்லது அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே தொடா்ந்து ஈடுபட முடியும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.