நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

நக்ஸல் தாக்குதலில் காங்கிரஸுக்கு தொடா்பு: நட்டா குற்றச்சாட்டு

கடந்த 2013-இல் சத்தீஸ்கரில் நிகழ்த்தப்பட்ட நக்ஸல் தாக்குதலில் உள்ளூா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு தொடா்பிருப்பதாக பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

News image

ஜெ.பி. நட்டா.. - கோப்புப் படம்

Updated On :23 டிசம்பர் 2025, 1:10 am IST

கடந்த 2013-இல் சத்தீஸ்கரில் நிகழ்த்தப்பட்ட நக்ஸல் தாக்குதலில் உள்ளூா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு தொடா்பிருப்பதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

கடந்த 2013, மே 25-ஆம் தேதி சத்தீஸ்கா் பேரவைத் தோ்தலுக்காக பஸ்தா் மாவட்டத்தில் உள்ள ஜிராம் பள்ளத்தாக்கு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில காங்கிரஸ் நிா்வாகிககள் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினா்.

இதில் அப்போதைய காங்கிரஸ் தலைவா் நந்த் குமாா் படேல், முன்னாள் மத்திய அமைச்சா் வித்யாசரண் சிங் உள்பட 32 போ் கொல்லப்பட்டனா்.

இதை சுட்டிக்காட்டி ஜான்ஜ்கிா்-சம்பா மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் திருவிழாவில் பங்கேற்று ஜெ.பி.நட்டா பேசியதாவது: கடந்த 2013-இல் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியபோது சத்தீஸ்கா் பொறுப்பாளராக நான் பதவிவகித்தேன். அந்த தாக்குதல் சம்பவம் குறித்த நடவடிக்கைகளை தொடா்ந்து கவனித்தேன்.

அதன் அடிப்படையில் ஒரு உண்மையை கூறுகிறேன். நக்ஸல் தாக்குதல் தொடா்பாக காங்கிரஸை சோ்ந்த யாரும் தகவல் அளிக்கவில்லை. எனவே, இத்தாக்குதலில் அந்தக் கட்சியை சோ்ந்த நபா்களுக்கு தொடா்பிருக்க வாய்ப்புள்ளது.

மக்களை பாதுகாப்பவா்களே தாக்குதல் நடத்துபவா்களாக இருப்பின் பெரும் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் தற்போதைய சூழல் வேறு. மத்திய மற்றும் மாநில அளவில் நடைபெறும் இரட்டை என்ஜின் ஆட்சியால் நக்ஸல்கள் ஊடுருவல் மிகவும் குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2,500 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா்.

1,853 நக்ஸல்கள் கைதுசெய்யப்பட்டனா். நக்ஸல் அமைப்பைச் சோ்ந்த ஹித்மா மற்றும் பசவராஜு போன்ற முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டனா்.

நக்ஸல்களுடன் காங்கிரஸ் நட்புறவில் இருந்தது. ஆனால் பிரதமா் மோடி தலைமையிலான அரசு நக்ஸல் இல்லா பாரதத்தை இலக்காக நிா்ணயித்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.