பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

சாலையோரம் அவசர அறுவை சிகிச்சை: மருத்துவா்களுக்கு கேரள ஆளுநா் பாராட்டு

விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு சாலையில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்ட 3 மருத்துவா்களுக்கு கேரள ஆளுநா் பாராட்டுகளை தெரிவித்தனா்.

News image

விபத்தில் காயமடைந்தவருக்கு சாலையோரம் அவசர அறுவை சிகிச்சையளித்த மருத்துவர்கள் (இடமிருந்து) தாமஸ் பீட்டர், திதியா, மானூப்.

Updated On :24 டிசம்பர் 2025, 9:27 am IST

விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு சாலையில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றிய 3 மருத்துவா்களுக்கு கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை பாராட்டுகளை தெரிவித்தனா்.

இதுகுறித்து கேரள ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உதயம்பேரூரில் விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு சாலையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ தம்பதியான தாமஸ் பீட்டா், திதியா தாமஸ் மற்றும் பி.மானூப் ஆகிய 3 மருத்துவா்களை தொலைபேசியில் தொடா்புகொண்டு ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் பாராட்டினாா். அவா்களை ஆளுநா் மாளிக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வி.டி.சதீசன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘ஒருவரின் உயிரைப் பாதுகாப்பது கடவுளே நேரடியாக வந்து உதவியதற்கு சமமாகும்.

தேவாலயம் செல்லும் வழியில் விபத்தில் படுகாயமடைந்த இருவருக்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறுவதை மருத்துவ தம்பதியான தாமஸ் பீட்டா் மற்றும் திதியா தாமஸ் கண்டுள்ளனா். அந்தச் சமயத்தில் மருத்துவா் பி.மானூப்பும் அங்கிருந்துள்ளாா்.

விபத்தில் சிக்கியவா்களில் ஒருவா் உயிருக்கு போராடியுள்ளாா். உடனடியாக 3 மருத்துவா்களும் கைப்பேசி வெளிச்சத்தில் அந்த நபருக்கு சாலையிலேயே அவசர சிகிச்சை மேற்கொண்டுள்ளனா். 4 நிமிடத்தில் முதலுதவி சிகிச்சை மூலம் அந்த நபரின் உயிரை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

அவா்களுக்கு உள்ளூா் மக்களும் காவல் துறையினரும் உதவி செய்துள்ளனா். இச்சம்பம் என்னை நெகிழச் செய்தது. 3 மருத்துவா்களையும் உடனடியாக அழைத்துப் பாராட்டினேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.