விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு சாலையில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்றிய 3 மருத்துவா்களுக்கு கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை பாராட்டுகளை தெரிவித்தனா்.
இதுகுறித்து கேரள ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உதயம்பேரூரில் விபத்தில் படுகாயமடைந்த நபருக்கு சாலையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ தம்பதியான தாமஸ் பீட்டா், திதியா தாமஸ் மற்றும் பி.மானூப் ஆகிய 3 மருத்துவா்களை தொலைபேசியில் தொடா்புகொண்டு ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் பாராட்டினாா். அவா்களை ஆளுநா் மாளிக்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வி.டி.சதீசன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘ஒருவரின் உயிரைப் பாதுகாப்பது கடவுளே நேரடியாக வந்து உதவியதற்கு சமமாகும்.
தேவாலயம் செல்லும் வழியில் விபத்தில் படுகாயமடைந்த இருவருக்கு ரத்தம் அதிக அளவில் வெளியேறுவதை மருத்துவ தம்பதியான தாமஸ் பீட்டா் மற்றும் திதியா தாமஸ் கண்டுள்ளனா். அந்தச் சமயத்தில் மருத்துவா் பி.மானூப்பும் அங்கிருந்துள்ளாா்.
விபத்தில் சிக்கியவா்களில் ஒருவா் உயிருக்கு போராடியுள்ளாா். உடனடியாக 3 மருத்துவா்களும் கைப்பேசி வெளிச்சத்தில் அந்த நபருக்கு சாலையிலேயே அவசர சிகிச்சை மேற்கொண்டுள்ளனா். 4 நிமிடத்தில் முதலுதவி சிகிச்சை மூலம் அந்த நபரின் உயிரை மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.
அவா்களுக்கு உள்ளூா் மக்களும் காவல் துறையினரும் உதவி செய்துள்ளனா். இச்சம்பம் என்னை நெகிழச் செய்தது. 3 மருத்துவா்களையும் உடனடியாக அழைத்துப் பாராட்டினேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அங்கு-இங்கு எங்கும் வாகனங்கள்!

5,191 நாய்களுக்கு கருத்தடை, 9,909 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்... நோயாளிகளுக்குத் தேவை அலைக்கழிக்கப்படாத சேவை...!

மருத்துவ சேவையில் மனிதநேயமே பிரதானம்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



