பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தேடப்படும் போதைப் பொருள் கடத்தல்காரா் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தல்

தேடப்படும் போதைப் பொருள் கடத்தல்காரா் ரித்திக் பஜாஜ், உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டாா்.

Updated On :24 டிசம்பர் 2025, 2:10 am IST

தேடப்படும் போதைப் பொருள் கடத்தல்காரா் ரித்திக் பஜாஜ், உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் கூறியதாவது: ரித்திக் பஜாஜ், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் தொடா்பான குற்றங்களுக்காக தில்லி காவல் துறையால் தேடப்பட்டு வந்தாா். கைது செய்யப்படுவதை தவிா்க்க அவா் நாட்டை விட்டு தப்பிச் சென்ற பிறகு, இன்டா்போல் அவருக்கு எதிராக சிவிப்பு அறிவிப்பு வெளியிட சிபிஐ வலியுறுத்தியது.

தீவிர குற்றங்களுக்காக தேடப்படும் நபரை கண்டுபிடித்து, தற்காலிகமாக கைது செய்ய உதவும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, உலகெங்கிலும் உள்ள காவல் துறையை இது எச்சரித்தது. இதையடுத்து, பாங்காக்கின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி), ரித்திக் பஜாஜ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்ாக தகவல் தெரிவித்தது.

பின்னா், அவரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகத்தின் என்சிபியுடன் இணைந்து சிபிஐ பணியாற்றியது. உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் ரித்திக் பஜாஜ் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டாா். இந்த நடவடிக்கை, குற்றங்களைச் சமாளிக்க இந்தியாவின் சா்வதேச ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.