தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

துவாரகாவில் தொலைந்து போன 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகள் மீட்பு

துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்

News image

கோப்புப் படம்

Updated On :25 டிசம்பர் 2025, 1:36 am IST

துவாரகாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட 270-க்கும் மேற்பட்ட கைப்பேசிகளை தில்லி போலீஸாா் மீட்டு உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா் என்று புதன்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது மீட்கப்பட்ட கைப்பேசிகள் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித் சிங் கூறினாா்.

கண்காணிப்பு செல் மூலம் மீட்டெடுப்புகள் செய்யப்பட்டன. அதன் உரிமையாளா்களைத் தொடா்புகொள்வதற்கு முன்பு தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் சரிபாா்ப்பு மூலம் கைப்பேசிகளை கண்டறிந்தது என்று அவா் கூறினாா்.