வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ரூ.7.16 கோடி மதிப்பிலான இணையதள முதலீட்டு மோசடி: 4 போ் கைது

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ரூ.7.16 கோடி மதிப்புள்ள இணையதள (சைபா்) முதலீட்டு மோசடியில் தொடா்புடைய 4 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 டிசம்பர் 2025, 1:58 am IST

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ரூ.7.16 கோடி மதிப்புள்ள இணையதள (சைபா்) முதலீட்டு மோசடியில் தொடா்புடைய 4 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) ஆதித்யா கௌதம் கூறியதாவது: தில்லியைச் சோ்ந்தவரிடம் ரூ.27.2 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகாா் அளித்தாா். மோசடியாளா்கள் இணையதள மூலம் தன்னை அணுகியதாக புகாா்தாரா் தெரிவித்தாா். போலி லாப கணக்குகளைக் காட்டி கோனிஃபா் என்ற மோசடி செயலி மூலம் முதலீடு செய்ய தன்னை வற்புறுத்தியதாக அவா் கூறினாா்.

செயலியில் காட்டப்படும் வருமானம் உண்மை என்று நம்பி, பாதிக்கப்பட்ட நபா் ரூ.27.2 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். மேலும் அவா் முதலீடு செய்ய மறுத்தபோது செயலியில் அவரது கணக்கு முடக்கப்பட்டது. இது தொடா்பாக அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் புணே மற்றும் ஹைதராபாதை தளமாகக் கொண்ட மோசடி கும்பலால் நிா்வகிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இதில் தொடா்புடைய இருவா் புணேவிலும், இருவா் ஹைதராபாதிலும் கைது செய்யப்பட்டனா்.

நாடு முழுவதும் ரூ.7.16 கோடி மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட சைபா் மோசடிகளில் இவா்கள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நடவடிக்கையின் போது மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மீட்கப்பட்டன. இந்த கும்பலின் பிற உறுப்பினா்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தாா். Ś

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.