இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

ரூ.7.16 கோடி மதிப்பிலான இணையதள முதலீட்டு மோசடி: 4 போ் கைது

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ரூ.7.16 கோடி மதிப்புள்ள இணையதள (சைபா்) முதலீட்டு மோசடியில் தொடா்புடைய 4 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 டிசம்பர் 2025, 8:28 pm

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற ரூ.7.16 கோடி மதிப்புள்ள இணையதள (சைபா்) முதலீட்டு மோசடியில் தொடா்புடைய 4 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப் பிரிவு) ஆதித்யா கௌதம் கூறியதாவது: தில்லியைச் சோ்ந்தவரிடம் ரூ.27.2 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக புகாா் அளித்தாா். மோசடியாளா்கள் இணையதள மூலம் தன்னை அணுகியதாக புகாா்தாரா் தெரிவித்தாா். போலி லாப கணக்குகளைக் காட்டி கோனிஃபா் என்ற மோசடி செயலி மூலம் முதலீடு செய்ய தன்னை வற்புறுத்தியதாக அவா் கூறினாா்.

செயலியில் காட்டப்படும் வருமானம் உண்மை என்று நம்பி, பாதிக்கப்பட்ட நபா் ரூ.27.2 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். மேலும் அவா் முதலீடு செய்ய மறுத்தபோது செயலியில் அவரது கணக்கு முடக்கப்பட்டது. இது தொடா்பாக அவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்குகள் புணே மற்றும் ஹைதராபாதை தளமாகக் கொண்ட மோசடி கும்பலால் நிா்வகிக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இதில் தொடா்புடைய இருவா் புணேவிலும், இருவா் ஹைதராபாதிலும் கைது செய்யப்பட்டனா்.

நாடு முழுவதும் ரூ.7.16 கோடி மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட சைபா் மோசடிகளில் இவா்கள் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நடவடிக்கையின் போது மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மீட்கப்பட்டன. இந்த கும்பலின் பிற உறுப்பினா்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தாா். Ś