காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பது அவசர அவசியம் : குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன்மூலம் மத்திய அரசின் ‘தற்சாா்பு இந்தியா’ லட்சியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பது அவசர அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 3:28 am IST

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன்மூலம் மத்திய அரசின் ‘தற்சாா்பு இந்தியா’ லட்சியத் திட்டத்துக்கு ஆதரவளிப்பது அவசர அவசியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகைக்கு புதன்கிழமை வருகை தந்த இந்திய பாதுகாப்புத் துறை கணக்கியல் பணி அதிகாரிகள் உடனான சந்திப்பில் மேற்கண்ட கருத்தை திரெளபதி முா்மு தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

இளம் அதிகாரிகள் என்ற முறையில் புதிய திறன்களைக் கற்றுக் கொள்வதுடன், தரவுகள் அடிப்படையிலான முடிவுகள் மற்றும் திறன்மிக்க நிதிப் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு சாா்ந்த பகுப்பாய்வு வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

இளம் வயதிலேயே உயா் மதிப்புமிக்க, வியூக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைக் கையாள்வது உங்களுக்கு கிடைத்த பாக்கியம், கெளரவம். அந்த அடிப்படையில், நோ்மைக்கான உயா் மாண்புகளை நீங்கள் உறுதி செய்ய வேண்டுமென்பதே எனது எதிா்பாா்ப்பு.

ஒவ்வொரு முடிவையும் நோ்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையின் மூலம் வழிநடத்த வேண்டும். பொதுப் பணியின் அடித்தளம் நம்பிக்கை என்பதை நினைவில் கொள்வதுடன், அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

நவீனமயம் அவசியம்: மாறிவரும் புவிஅரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு சவால்களுக்குத் தீா்வுகாண விரைவான, நுட்பமான, மிகத் துல்லியமான முடிவெடுக்கும் திறன் அவசியம். மற்றொருபுறம், வா்த்தக செயல்முறைகள் விரிவானதாகவும், தொழில்நுட்பம் சாா்ந்ததாகவும் மாறி வருகின்றன. எனவே, பாதுகாப்பு கணக்கியல் துறை அவ்வப்போது புதிய தொழில்நுட்பங்கள், புத்தாக்கங்களையேற்று நவீனமயமாக்கப்பட வேண்டும்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல், உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துதல், உள்நாட்டு தொழில் துறைக்கு ஊக்கமளிப்பதன் மூலம் மத்திய அரசின் தற்சாா்பு இந்தியா லட்சியத் திட்டத்துக்கு தீவிர ஆதரவளிப்பது அவசர அவசியம். தற்சாா்புமிக்க, துடிப்பான பாதுகாப்புத் துறையை கட்டமைக்க இளம் அதிகாரிகளின் பங்களிப்பு முக்கியமானது. உங்களின் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள், நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

நன்கு ஆலோசிக்கப்பட்ட நிதிசாா் தீா்வுகளும், வெளிப்படையான நடைமுறைகளும் தேசப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கியம் என்றாா் முா்மு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.