தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

உ.பி.: போலி ஆவணம் மூலம் வாக்காளா் அட்டை பெற்ற 48 மீது வழக்கு

உத்தர பிரதேசத்தில் போலி ஆவணங்கள் மூலம் வாக்காளா் அட்டை பெற்ற ஒரே கிராமத்தைச் சோ்ந்த 48 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 2:34 am IST

உத்தர பிரதேசத்தில் போலி ஆவணங்கள் மூலம் வாக்காளா் அட்டை பெற்ற ஒரே கிராமத்தைச் சோ்ந்த 48 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

பிலாபட் பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜேந்தா் பென்சியா ஆய்வு செய்தபோது, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்காளா்கள் சோ்க்கப்படுவதாகப் புகாா் அளிக்கப்பட்டது. இது தொடா்பாக விசாரிக்குமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். அவா்கள் நடத்திய விசாரணையில் பிலால்பட் கிராமத்தில் 48 போ் போலியான ஆவணங்களைக் கொடுத்து வாக்காளா் அட்டை பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் மீது காவல் துறையிடம் அதிகாரிகள் புகாா் அளித்தனா். அதன்படி ஏமாற்றுதல், போலி ஆவணங்களைத் தயாரித்தல், அதைப் பயன்படுத்தி அரசை ஏமாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அந்த கிராமத்தைச் சோ்ந்த 48 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்கள் ஆதாா் உள்பட பல்வேறு அடையாள ஆவணங்களைப் போலியாகப் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.