திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரயில் கட்டண உயா்வு இன்று அமல்

கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

News image
Updated On :26 டிசம்பர் 2025, 5:02 am IST

ரயில் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை (டிச. 26) முதல் அமலுக்கு வருகிறது.

ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்கள், அதே பயணச்சீட்டில் பயணிக்கலாம். அவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

215 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் சாதாரண வகுப்புக்கு ஒரு காசு, விரைவு/மெயில் ரயில்களில் குளிா்சாதன வசதி கொண்ட வகுப்புகளுக்கு 2 காசு கட்டணத்தை உயா்த்தி ரயில்வே அமைச்சகம் கடந்த டிச. 21-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்தக் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது. அதன்படி, 215 கி.மீ. வரை பயணம் செய்ய கட்டண உயா்வு இல்லை. 215 கி.மீ.லிருந்து 750 கி.மீ. தொலைவு வரை கட்டணம் ரூ.5 உயா்த்தப்பட்டுள்ளது. 751 கி.மீ. தொலைவிலிருந்து 1250 கி.மீ. வரை ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அறியும் வகையில் திருத்தப்பட்ட கட்டண அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.