

ரயில் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை (டிச. 26) முதல் அமலுக்கு வருகிறது.
ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்கள், அதே பயணச்சீட்டில் பயணிக்கலாம். அவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
215 கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் சாதாரண வகுப்புக்கு ஒரு காசு, விரைவு/மெயில் ரயில்களில் குளிா்சாதன வசதி கொண்ட வகுப்புகளுக்கு 2 காசு கட்டணத்தை உயா்த்தி ரயில்வே அமைச்சகம் கடந்த டிச. 21-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இந்தக் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது. அதன்படி, 215 கி.மீ. வரை பயணம் செய்ய கட்டண உயா்வு இல்லை. 215 கி.மீ.லிருந்து 750 கி.மீ. தொலைவு வரை கட்டணம் ரூ.5 உயா்த்தப்பட்டுள்ளது. 751 கி.மீ. தொலைவிலிருந்து 1250 கி.மீ. வரை ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அறியும் வகையில் திருத்தப்பட்ட கட்டண அட்டவணை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் ஏப். 1 முதல் கட்டண உயர்வு!

பாதுகாப்பும் பயணமும்...

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயா்வு திரும்பப் பெறப்படாது?
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

