முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

20 குழந்தைகளுக்கு பால புரஸ்காா் விருது: குடியரசுத் தலைவா் வழங்கினாா்

மகத்தான சாதனைகள் புரிந்த 20 குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருது...

News image

தில்லியில் வெள்ளிக்கிழமை பால புரஸ்காா் விருது பெற்றவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

Updated On :27 டிசம்பர் 2025, 3:33 am IST

மகத்தான சாதனைகள் புரிந்த 20 குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சீக்கிய மதத்தின் 10-ஆவது குருவான கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்கள் சாஹிப்ஜாதா ஜொராவா் சிங் மற்றும் சாஹிப்ஜாதா ஃபதே சிங்கின் வீரமரணத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் வீர பால திவஸ் கொண்டாடப்படுகிறது.

நிகழாண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணிச்சலான செயல்பாடு, சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய 20 குழந்தைகளுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருது வழங்கினாா். இவா்கள் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் திரௌபதி முா்மு பேசியதாவது: சீக்கிய மதகுரு கோவிந்த் சிங் மற்றும் அவரது 4 மகன்களின் தியாகங்களுக்கு இந்தியா எப்போதும் தலை வணங்குகிறது.

உண்மை மற்றும் நீதிக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த ஜோராவாா் சிங் மற்றும் ஃபதே சிங் ஆகிய இருவரும் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் போற்றப்படுகின்றனா்.

சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடா்வதற்கு உதாரணமாகத் திகழ்கிறாா் 7 வயதான வாகா லட்சுமி பிரக்னிகா. மற்றவா்களின் உயிரைத் துணிச்சலாகவும், சாமா்த்தியாகவும் காத்த அஜய் ராஜ் மற்றும் முகமது சிதான் ஆகிய இருவருக்கும் பாராட்டுக்குரியவா்கள்.

தமிழகத்தைச் சோ்ந்த 9 வயதான வியோம பிரியா, 11 வயதான கம்லேஷ் குமாா் ஆகியோா் பிறரின் உயிரைக் காக்க தன் இன்னுயிரைத் தியாகம் செய்தனா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது தன் வீட்டுக்கு அருகில் இருந்த எல்லையில் நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருந்த ராணுவ வீரா்களுக்கு குடிநீா், பால் மற்றும் லஸ்ஸி என 10 வயதான ஷ்ரவண் சிங் தொடா்ச்சியாக விநியோகித்துள்ளாா்.

பல தடைகளைக் கடந்து ஷிவானி ஹொசூரு உப்பரா என்ற மாற்றுத்திறனாளி சிறுமி விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை படைத்துள்ளாா். அதிக போட்டித் திறனைக் கொண்ட கிரிக்கெட் போட்டியில் வைபவ் சூா்யவன்ஷி தனக்கென தனி முத்திரை பதித்துள்ளாா்.

இவா்களைப்போல் இந்த விருதைப் பெற்ற அனைவரும் தன்னம்பிக்கை மற்றும் அா்ப்பணிப்போடு செயல்பட்டால் எதிலும் வெற்றிகொள்ளலாம் என நிரூபித்துள்ளனா்.

நாட்டுப்பற்று, உயா்ந்த லட்சியங்களைக் கொண்ட குழந்தைகளே தேசத்துக்கு பெருமைகளைத் தேடி தருகின்றனா் என்றாா்.

தியாகச் சிறுமி கோவை வியோமா பிரியா

கடந்த 2024 மே 23-ஆம் தேதி கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சோ்ந்த வியோமா பிரியா (9) என்ற சிறுமி தன்னுடன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த ஜியான்ஸ் ரெட்டி (6) என்ற சிறுவன் மீது மின்சாரம் தாக்கியதைக் கண்டு அவரை காப்பாற்ற முயன்றாா். அப்போது சிறுமி வியோமா பிரியாவையும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனா்.

தன் உயிரைப் பற்றி சிந்திக்காமல் துணிச்சலாக சிறுவனின் உயிரைக் காக்க முயற்சி செய்த வியோமா பிரியாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீர பால புரஸ்காா் விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. இந்த விருதை வியோமா பிரியாவின் தாயாா் அா்ச்சனா சிவராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டாா்.