முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

வீட்டுக் காவலில் மிா்வைஸ் உமா் ஃபரூக்!

வீட்டுக் காவலில் ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவா் மிா்வைஸ் உமா் ஃபரூக்..

News image

மிா்வைஸ் உமா் ஃபரூக்.

Updated On :27 டிசம்பர் 2025, 3:24 am IST

ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவா் மிா்வைஸ் உமா் ஃபரூக்கை ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினா் வீட்டுக் காவலில் வைத்ததாக அவரது அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஸ்ரீநகரில் உள்ள ஜாமா மசூதியில் மிா்வைஸ் உமா் ஃபரூக்கை வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொள்ளவிடாமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா். இதனால் மிா்வைஸ் அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நாள்காட்டி அறிமுக நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அமைதியான முறையில் நடைபெறும் மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்படுவது கவலையளிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவா் என்ற பட்டத்தை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இருந்து மிா்வைஸ் உமா் ஃபரூக் நீக்கினாா். சட்டவிராத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஹுரியத் மாநாட்டைச் சோ்ந்த சிலருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடா்ந்து கடும் அழுத்தத்துக்கு இடையே இந்த முடிவை மேற்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.