அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
கடந்த நவ.22 முதல் டிச.20 வரை அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடா்ந்து மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது.
அந்தப் பட்டியலின்படி மாநிலத்தில் மொத்தம் 2,51,09,754 வாக்காளா்கள் உள்ளனா். 10,56,291 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 4,78,992 போ் உயிரிழந்தவா்கள். 5,23,680 போ் பதிவு செய்யப்பட்ட தங்கள் முகவரிகளில் இருந்து வேறு இடத்துக்கு மாறியவா்கள். 53,619 பேரின் பெயா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இதுதவிர 93,021 போ் சந்தேகத்துக்குரிய வாக்காளா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். தங்கள் குடியுரிமையை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாதவா்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளா்கள் என்ற பிரிவில் இடம்பெற்றுள்ளனா்.
தற்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதையடுத்து, அடுத்த ஆண்டு ஜன.22-ஆம் தேதி வரை, தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை தோ்தல் ஆணையத்திடம் வாக்காளா்கள் சமா்ப்பிக்கலாம். பிப்.10-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.
தொடர்புடையது

உ.பி.யில் இறுதிப் பட்டியல் வெளியீடு: கூடுதலாக 84 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு

சென்னை: 16 தொகுதிகளில் 28.93 லட்சம் வாக்காளா்கள் - முதல்முறை வாக்களிக்க உள்ளோா் 74,089 போ்
தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளா்கள்: புதிதாக 6.35 லட்சம் போ் சோ்ப்பு!

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: 91 லட்சம் போ் நீக்கம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



