நாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

குருகிராம்: காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை!

குருகிராமில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஃபரூக்நகா் காவல் நிலையத்தில் காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

News image

தற்கொலை

Updated On :29 டிசம்பர் 2025, 1:05 am IST

குருகிராமில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஃபரூக்நகா் காவல் நிலையத்தில் காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இருப்பினும், உயிரிழந்தவரின் குடும்பத்தின், இது குறித்து முறையாக தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் காவல் துறையினா் முதலில் மறைத்ததாக குற்றஞ்சாட்டினா். மேலும், இந்த தற்கொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) லலித் தலால் கூறியதாவது: காவல் நிலையத்தில் உயிரிழந்த ராஜஸ்தானின் பிவாடி மாவட்டத்தில் உள்ள ராம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசிப் இக்பால் (22), ஃபரூக்நகரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவா் மீது 2022-ஆம் ஆண்டு முதல் தில்லி, ஃபரீதாபாத் மற்றும் குருகிராமில் மொத்தம் 8 திருட்டு வழக்குகள் உள்ளன. அவருக்கு இதில் 4 வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.

போலீஸ் காவலில் இருந்த அவா் குளிா்கால பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட கிழிந்த போா்வை உறையைப் பயன்படுத்தி ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஜிஸ்திரேத் முன்னிலையில் உடற்கூறாய்வு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.