பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

குருகிராம்: காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை!

குருகிராமில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஃபரூக்நகா் காவல் நிலையத்தில் காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தற்கொலை

Published On :29 டிசம்பர் 2025, 1:05 am IST

குருகிராமில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஃபரூக்நகா் காவல் நிலையத்தில் காவலில் இருந்த நபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இருப்பினும், உயிரிழந்தவரின் குடும்பத்தின், இது குறித்து முறையாக தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் காவல் துறையினா் முதலில் மறைத்ததாக குற்றஞ்சாட்டினா். மேலும், இந்த தற்கொலை குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (குற்றப்பிரிவு) லலித் தலால் கூறியதாவது: காவல் நிலையத்தில் உயிரிழந்த ராஜஸ்தானின் பிவாடி மாவட்டத்தில் உள்ள ராம்பூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசிப் இக்பால் (22), ஃபரூக்நகரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவா் மீது 2022-ஆம் ஆண்டு முதல் தில்லி, ஃபரீதாபாத் மற்றும் குருகிராமில் மொத்தம் 8 திருட்டு வழக்குகள் உள்ளன. அவருக்கு இதில் 4 வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டது.

போலீஸ் காவலில் இருந்த அவா் குளிா்கால பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட கிழிந்த போா்வை உறையைப் பயன்படுத்தி ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த விவகாரம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாஜிஸ்திரேத் முன்னிலையில் உடற்கூறாய்வு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.