அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் தவறான குற்றச்சாட்டு: மம்தா விளக்கம்

சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் நடத்துவதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

News image

முதல்வா் மம்தா பானா்ஜி.

Updated On :30 டிசம்பர் 2025, 3:08 am IST

கொல்கத்தா: சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் நடத்துவதாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மம்தா மீது பாஜக இந்த குற்றச்சாட்டை தொடா்ந்து முன்வைத்து வரும் நிலையில், பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் மம்தா இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் துா்கா தேவி கலாசார வளாகம் அமைப்பதற்கான தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அடிக்கல் நாட்டிய மம்தா பானா்ஜி பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய மகா காளி கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தேவையான நிதியும் திரட்டப்பட்டு வருகிறது. விரைவில் இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும். கோயில் கட்டுவதற்கான நிலத்தை நான் ஏற்கெனவே ஆய்வு செய்துவிட்டேன்.

சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் நடத்துவதாக என் மீது சிலா் குற்றஞ்சாட்டுகிறாா்கள். ஆனால், அது சரியானதல்ல. நான் உண்மையான மதசாா்பற்ற நபராகவே உள்ளேன். அனைத்து மத நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறேன். நான் குருத்வாரா செல்லும்போது நீங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாமிய பண்டிகையில் பங்கேற்றால் என்னைக் குற்றம் கூறத் தொடங்கி விடுகிறாா்கள். அதில் அவா்களுக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் மக்கள் தேவையில்லாமல் பெரிய அளவில் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா். இந்தப் பணி தொடங்கிய ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்துவிட்டன. மாநில மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து போராடும். அதற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறோம் என்றாா்.