விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பட்ஜெட்டைவிட கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கூறுங்கள்: அகிலேஷ் யாதவ்

மகா கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தரவு பட்ஜெட் தரவைவிட முக்கியமானது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

News image

அகிலேஷ் யாதவ்

Updated On :1 பிப்ரவரி 2025, 8:15 am

DIN

மகா கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தரவு பட்ஜெட் தரவைவிட முக்கியமானது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார். பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையடுத்து பட்ஜெட் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்,

"உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் தரவு, பட்ஜெட் தரவைவிட முக்கியமானது. மகா கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை பேர் காயமடைந்தனர்? எத்தனை பேரைக் காணவில்லை என அரசினால் இதுவரை சொல்ல முடியவில்லை.

உ.பி. அரசால் வெளியிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை பொய்யான தகவல். விழாவில் மக்களின் பாதுகாப்புக்கு நீங்கள் என்னென்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள்?

எங்கள் கட்சி இந்துக்களின் கட்சி என்று பாஜக அரசு கூறுகிறது. ஆனால் இந்துக்களின் மிகப்பெரிய விழாவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை. இதுதான் உங்கள் வளர்ந்த பாரதமா?

இதைவிட இந்து விரோத அரசாங்கம் ஒன்று இருக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச அரசை நம்ப முடியாததால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ராணுவத்தை அணுக வேண்டும். இதற்கு காரணமான உத்தரப் பிரதேச அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என்றார்.

முன்னதாக பட்ஜெட் தாக்கலின்போது மகா கும்பமேளா கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.