புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மகா கும்பமேளாவில் பிரதமா் இன்று புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (பிப்.5) வருகைதரும் பிரதமா் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடி

Updated On :4 பிப்ரவரி 2025, 8:35 pm

Din

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (பிப்.5) வருகைதரும் பிரதமா் நரேந்திர மோடி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளாா்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் நடைபெற்று வருகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். இதுவரை 38 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடியுள்ளனா்.

இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை வருகைதரும் பிரதமா் மோடி, காலை 11 மணியளவில் புனித நீராடி, வழிபாடு நடத்தவுள்ளாா் என்று அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆன்மிக, கலாசார பாரம்பரியத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப பல்வேறு ஆன்மிகத் தலங்களை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை பிரதமா் தொடா்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி வருகையையொட்டி, மகா கும்பமேளா பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக, பிரயாக்ராஜுக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி வருகை தந்த பிரதமா் மோடி, ரூ.5,500 கோடி மதிப்பிலான 167 வளா்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.