மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கும்பமேளாவில் அலைமோதும் கூட்டம்! ரயில் என்ஜினில் ஏறிய பயணிகளால் பரபரப்பு!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் அலைமோதும் கூட்டம் பற்றி...

News image

ரயில் என்ஜினில் ஏறிய பயணிகள்.

Updated On :10 பிப்ரவரி 2025, 12:10 pm IST

மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் சுற்றுப்பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களில் போதுமான இடவசதி இல்லாததால் ரயிலும் என்ஜினில் பயணிகள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தருவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த அரசு துறைகளும் திணறி வருகின்றன.

பிரயாக்ராஜ் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணிநேரமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலுக்கு காத்திருக்கும் சூழல் நிலவி வருகின்றது. அதேபோல், பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடம் இல்லாததால், முன்பதிவு பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிகள் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.

முன்பதிவு பெட்டிகளில் பயணிகள் ஏறுவதை ரயில்வே அதிகாரிகளாலும் தடுக்க முடியவில்லை. இந்த அசாதாரண சூழலுக்கு முறையான ஏற்பாடு செய்யாததே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், வாரணாசி ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வருகைதந்த ஒரு ரயிலில் அனைத்துப் பெட்டிகளிலும் பயணிகள் நிரம்பினர். இதையடுத்து சில பயணிகள் ரயில் என்ஜினில் ஓட்டுநரின் பகுதியில் ஏறி கதவைப் பூட்டிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அப்பகுதிக்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் அனைத்துப் பயணிகளையும் என்ஜின் பகுதியில் இருந்து அப்புறவுபடுத்தினர்.

இதனிடையே, பிரயாக்ராஜ் ரயில் நிலையம் மற்றும் மகா கும்பமேளா பகுதியில் அமைந்துள்ள 8 ரயில் நிலையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.