அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமா் மோடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்கை வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சிறந்த ஆளுகை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தனது அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசுத் துறைகள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக எலான் மஸ்கை தோ்ந்தெடுத்துள்ளாா்.
இந்நிலையில், மஸ்குடனான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘எலான் மஸ்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருக்கு மிகவும் விருப்பமான போக்குவரத்து, தொழில்நுட்பம், விண்வெளி, புதிய கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசித்தோம்.
அதேபோல் ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிா்வாகம்’ என்ற இந்தியாவின் சீா்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் எடுத்துரைத்தேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் பிரதமா் பேச்சு

இத்தாலியில் பிரதமர் ஜார்ஜியா உடன் மோடி சந்திப்பு - புகைப்படங்கள்

செயற்கை நுண்ணறிவு

மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



