லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

Published On :15 பிப்ரவரி 2025, 12:57 pm IST

அமிருதசரஸ்: நாடு கடத்தும் இந்தியர்களுடன், அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையின்படி, இரண்டாவது விமானம் நாளை காலை அமிருதசரஸில் தரையிறங்கவிருக்கிறது.

இது பஞ்சாப் மற்றும் பஞ்சாபி மக்களை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், ஏதோ முதலில் ஒரு அமெரிக்க விமானம் அமிருதசரஸில் தரையிறங்கியது. தற்போது இரண்டாவது விமானமும் அமிருதசரஸில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், அமெரிக்க ராணுவ விமானம் அமிருதசரஸில் தரையிறங்க வேண்டும் என்று முடிவு செய்ய மிக முக்கிய காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் இதனை தேர்வு செய்தீர்களா? பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்துக் கொண்டனர். இதுதான் டிரம்ப் கொடுக்கும் பரிசா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.