நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடு எது? 2வது இடத்தில் இந்தியா!

2024ஆம் ஆண்டில் அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது.

News image

மாதிரிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2025, 9:00 pm IST

2024ஆம் ஆண்டில் அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆக்செஸ் நவ் (Access Now) என்ற லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பு, அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

இதில் 2024-ல் அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடு மியான்மர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் 85 முறை இணைய முடக்கம் அங்கு நடந்துள்ளது.

இதற்கு ஒருமுறை குறைவாக, 84 முறை இந்தியாவில் இணைய முடக்கம் நடந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. பாகிஸ்தானில் 21 முறை. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக ரஷியா உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில், 84 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது இதுவே முதல்முறை.

இந்தியாவில் 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அதிகமுறை இணைய முடக்கத்தை சந்தித்துள்ளன.

இதில் மணிப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 21 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜம்மு - காஷ்மீர் (12), ஹரியாணா (12) முறை இணைய முடக்கம் நடந்துள்ளன.

இந்தியாவில் 84 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில், 41 முறை போராட்டத்தால் மட்டுமே நடந்துள்ளது. 23 முறை வகுப்புவாத வன்முறையால் நடந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.