உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

ஐரோப்பிய மக்கள்தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள்தொகையை விட மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் என்றார் பிரதமர் மோடி.

News image

பிரதமர் நரேந்திர மோடி / நிதீஷ் குமார் - PTI

Updated On :24 பிப்ரவரி 2025, 7:05 pm IST

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள்தொகையை விட மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 24) தெரிவித்தார்.

காட்டுமிராண்டித்தனமான அரசு என வர்ணிக்கப்பட்ட தலைவர்கள் நமது பாரம்பரியத்தையும் நம்பிக்கையையும் வெறுப்பதாகவும், அவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

பிகார் மாநிலம் பாகல்பூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில், மகா கும்பமேளாவின் சிறப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,

''ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்தப் புனிதமான நிகழ்வை காட்டுமிராண்டி அரசை (லாலு பிரசாத் யாதவைக் குறிப்பிட்டு) நடத்திய தலைவர்கள் விமர்சிக்கின்றனர். அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் தற்போது மகா கும்பமேளாவை விமர்சிக்கும் வாய்ப்பை எடுத்துக்கொள்கின்றனர். பிகார் மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

இந்தியாவின் சிறப்புமிக்க பாரம்பரியத்தைக் காப்பதற்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பாடுபட்டு வருகிறது. இதன்மூலம் வளமான எதிர்காலத்தை இந்த ஆட்சி உறுதி செய்யும். ஆனால், காட்டுமிராண்டித்தன ஆட்சி நடத்துபவர்கள் தொடர்ந்து நமது பாரம்பரியத்தை வெறுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்'' எனக் குறிப்பிட்டார்.

மகா கும்பமேளா நிகழ்வு தேவையற்ற ஒன்று எனவும், இதன்மூலம் மக்களுக்கு இன்னல்களே மிஞ்சுவதாகவும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.

மேலும், மகா கும்பமேளாவானது மரண கும்பமேளாவாகியிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி விமர்சித்திருந்தார். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.