மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தினா் வசிக்கும் கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தினா்.
பீதியடைந்த கிராம மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு தப்பியோடினா். இத்தாக்குதலில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அவா் கூறியதாவது: மலைப்பாங்கான காங்போக்பி மாவட்ட பகுதிகளில் இருந்தபடி, மேற்கு இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள கடங்பண்ட் கிராமத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் புதன்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினா். வெடிகுண்டுகளை வீசியும், அதிநவீன துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக, கிராம பாதுகாப்பு தன்னாா்வலா்களும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். கிராம மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பியோடினா். இத்தாக்குதலில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த கூடுதல் பாதுகாப்புப் படையினா் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா் என்றாா் அவா். கடங்பண்ட் கிராமத்தில் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, விஷ்ணுபூா் மற்றும் தெளபால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் தாக்குதலில் ஈடுபடுகின்றனா். மாநிலத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
முன்னதாக, மணிப்பூரில் இன மோதலுக்காக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரிய முதல்வா் பிரேன் சிங், அனைத்து சமூகத்தினரும் கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவூதி எண்ணெய் நிலையங்களில் ஹூதிக்கள் தாக்குதல்

தாய்லாந்தில் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்: 5 பாதுகாப்புப் படையினா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: இருவா் கைது

நைஜீரியா பள்ளிக்கூடத்தில் தாக்குதல்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


