இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

'இந்தியா கேட்' பெயரை மாற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கோரிக்கை!

'இந்தியா கேட்' பெயரை 'பாரத மாதா கேட்' என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் கடிதம்.

News image

PTI

Updated On :6 ஜனவரி 2025, 5:46 pm IST

'இந்தியா கேட்' பெயரை 'பாரத மாதா கேட்' என பெயர் மாற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் புகழ்பெற்ற இந்தியாவின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் 'இந்தியா கேட்' உள்ளது. இது போர் நினைவுச் சின்னமாக 1931ல் திறக்கப்பட்டது. முதல் உலகப் போரில் உயிர்நீத்த 82,000 வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது. இந்த 'கேட்'டில் 13,300 அதிகாரிகள், வீரர்களின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா கேட் பெயரை மாற்ற வேண்டும் என பாஜக சிறுபான்மையின பிரிவு தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா கேட் பெயரை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் .

இந்தியாவின் சின்னத்துக்கு பாரத மாதாவின் பெயரைச் சூட்டுவது தேசத்தின் சிறப்பான உணர்வை பிரதிபலிக்கும், தங்கள் உயிரை நாட்டிற்காக தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதையாகவும் இருக்கும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.