அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்க விபத்தில் 9 தொழிலாளர்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உம்ரங்சோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று (ஜன. 7) 15 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சுரங்கத்தின் உள்ளே திடீரென நீர் புகுந்ததால் தொழிலாளர்களில் 9 பேர் உள்ளே சிக்கியதாகக் கூறப்படுகிறது.
சிக்கியவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் சரியாகத் தெரியவில்லை என குவாரி தொழிலாளர்கள் கூறிய நிலையில், அசாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் 9 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியதாக அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 30 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், மாநிலத்தின் மீட்புப் படையினரும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நேபாள - திபெத் நிலநடுக்கம்: 53 ஆக உயர்ந்த பலி!
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள அசாம் முதல்வர், “சுரங்கத்தின் உள்ளே 100 அடிக்கு நீர் அளவு உயர்ந்துள்ளது. விசாகப்பட்டிணத்தில் இருந்து ஆழ்துளையில் மூழ்கி தேடுவதற்கு பயிற்சி பெற்ற டைவர்கள் வரவழைக்கப்பட உள்ளனர்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவக் குழுவினர், பொறியாளர்கள் குழு, அசாம் ரைஃபிள்ஸ், ராணுவப் படையினர் முதற்கொண்டு அனைவரும் மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடகிழக்கு மாவட்டங்களில் சுரங்கப் பணிகளில் தொழிலாளர்கள் சிக்கி பலியாவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்தாண்டு ஜனவரி மாதம், நாகாலாந்தில் உள்ள வோகா மாவட்டத்தில் சுரங்கத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். அடுத்ததாக, மே மாதத்தில் அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் 3 பேரும், செப்டம்பரில் 3 பேரும் பலியாகினர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு டிச. 13 அன்று மேகாலயாவில் நடந்த விபத்தில் சுரங்கத்தில் சிக்கி அதிகபட்சமாக 15 தொழிலாளர்கள் பலியாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு! உச்சகட்ட வாக்குசேகரிப்பு!

பொது சிவில் சட்டம் பழங்குடியினரைப் பாதிக்காது: அஸ்ஸாம் முதல்வர்!

பெண்களுக்கு மாதம் ரூ. 3,000.. இது அஸ்ஸாம் பாஜகவின் வாக்குறுதி!

இது அஸ்ஸாம் நிலவரம்! முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


